நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday 20 November 2012

மாவீரன் நெப்போலியன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx9RyTMH16RDPWiaKoKH-5US7aCUv_66VjAcMecNFLtUClly6Mhaa31Hh4GNOm9wSeqo0wwUN85JvMYw4FoJy_gvuhE-PVX_s_T1gDF-axD5wGp9TtZaIv6JGpeZw2MHaPs8K76yf7ajE/s1600/NapoleonStart+copy-704617.jpgபத்தொன்பதாம் நூற்றாண்டில் போர்கள் பல வென்றிருந்தாலும், மாவீரன் நெப்போலியனின் பெரும் புகழுக்குக் காரணம் அவர் ஒரு நல்ல ஒருங்கிணைப்பாளர், நிர்வாக செயலாட்சியர் மற்றும் திறமையான மேலாண்மையாளர் என்பதே.

ரவீந்திரா சித்தூர் என்பவர் இந்திய வணிகப் பள்ளியின் வினைமுறைத் திறம் (Strategy) துறையின் உதவிப் பேராசிரியர். இவர்  நெப்போலியனின் வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள் பற்றிய ஆய்வு செய்தவர்.  நெப்போலியனின் சாதனைகளுக்கான சில குணாதிசயங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.

1. அந்த நாட்களில் தொடர்ச்சியாகக் கற்றுக் கொள்வதற்கு நிறைய புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. நெப்போலியனுக்கு சிறுவயது முதலே வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்வி என்பது தொடர்ச்சியான செயற்பாங்கு (Education is a continuous process) என்று நெப்போலியன் கருதினார்.

ஒருவருடைய பதவிக்கும், உயர்ந்த நிலைக்கும் படிப்பு உதவும் என அவர் நம்பினார். பேரரசரான அவர் அரசருக்குத் தேவையான அனைத்தும் தெரியாமல் இருந்து விடக்கூடாது என்று எண்ணி, அவரது அரண்மனையிலேயே பல நூல்கள் நிறைந்த வாசகசாலை வைத்திருந்தார்.
1808 ல் உக்கிரமான போர்க்களங்களில் அவர் இருந்த போதும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும், சிறிய எழுத்துக்களில் ஓரங்களில் இடம் விட்டு அச்சிடாமலும், வாசிப்பதற்கு எளிதாக, தளர்வாக இணைத்தும் 1000 புத்தகங்களை அனுப்பும்படி வாசகசாலை நூலகருக்கு குறிப்பு அனுப்பினாராம்.

பேரரசன் நெப்போலியனிடம் மும்முரமான பதவிக் காலகட்டத்திலும், வாசிப்பதிலுள்ள அறிவுத் தாகம் தீவிரமாக இருந்தது. போர்க் கைதியாக செயின்ட் ஹெலினாவில் இருந்த கால கட்டத்திலும் அது தொடர்ந்தது. 

2. வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள படிப்பதைத் தவிர சிறந்த வழி வேறில்லை (No better way to learn in life than to read) என்று நெப்போலியன் கூறுகிறார். தொடர்ந்த வாசிப்பு தேவையென்றும், அவரது வாழ்க்கையின் எந்தத் தருணத்திலும் வாசிப்பதை நிறுத்தவில்லை என்றும் தெரிகிறது. ரூஸ்ஸோவின்   கோட்பாட்டுத் தொகுப்புகளின் மீதான தாக்கம் அவரிடம் இருந்தது. அவரது காலத்திய கல்வி மறுமலர்ச்சி ரூஸ்ஸோ கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது.

செயின்ட் ஹெலினாவில் கைதியாக இருந்த கடைசி நாட்களில் கப்பலில் புத்தகங்கள் மரப்பெட்டியில் கொண்டுவரப்பட்ட நாளை, பொன்னான நாளாகக் கருதினார். திறந்த ஈரமான அடுக்குகளில் 3000 புத்தகங்கள் வரை வைத்திருந்ததாகத் தெரிகிறது.

3. நெப்போலியன் தீவிரமான வாசிப்பாளர். எனவே வேண்டாத பகுதிகளை விடுத்து, தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் திறனுள்ளவர். மிக வேகமாக, ஒரு மணி நேரத்திற்குள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்துவிடுவாராம். உதவியாளருக்கு புத்தகங்களை எடுப்பதும், திரும்ப அடுக்குகளில் வைப்பதுமாக வேலை சரியாக இருக்கும்.

இன்றைய விரைவான உலகில், கிடைக்கும் அபரிமிதமான செய்திகளை அறிந்து கொள்ள வேகமாகவும், தேர்ந்தெடுத்து வாசிக்கவும் பழகிக் கொண்டால்தான் அவையில் முந்தியிருக்க முடியும். கண்ட அனைத்தையும் வாசித்து நேரத்தை வீணாக்காமல், தேர்ந்தெடுத்து வாசிக்கப் பழகிக் கொள்வது (Be selective in your reading) காலத்தின் கட்டாயம்.    

4. தற்கால நவநாகரீக உலகில் போட்டியைச் சமாளிக்க ஒவ்வொரு நாளும் உன் நேரத்தை சிறப்பாக செயல்படுத்த (Learn to manage your time better) கற்றுக் கொள்ளுங்கள் என்ற செய்தி நெப்போலியனின் வாழ்க்கையிலிருந்து சொல்லப்படுகிறது.

நெப்போலியன் வாழ்ந்தது 51 ஆண்டுகள், 7 மாதங்கள், 20 நாட்கள்தான். வாட்டர்லூ போரில் தோல்வியடைந்து செயின்ட் ஹெலினா தீவு சிறைக்கு நாடு கடத்தப்பட்டார். மிக மோசமான தட்ப வெட்ப நிலையுள்ள அந்தத் தீவில் ஆறு ஆண்டுகள் சாகும் வரை இருந்தார்.

அவர் இயல்பாக வாழ்ந்தது 45 ஆண்டுகள் தான் என்றாலும், இந்த குறுகிய காலகட்டத்தில் ஆக்க பூர்வமாக வாழ்ந்து, காலச் சக்கரத்தில் முத்திரை பதித்தவர். நெப்போலியனின் 1799 முதல் 1815 வரையுள்ள காலத்தில் அவருடைய அருஞ்செயல்கள் எல்லையில்லாதது. நெப்போலியன் அனைவர்க்கும் நல்லறிவூட்டி எச்சரிக்கை செய்வது என்னவெனில், 'தோல்வியுற்ற இடங்களைத் திரும்பப் பெறலாம், நேரத்தைப் பெற முடியாது' என்பதே.
5. நெப்போலியனுக்கு முக்கியமான தருணம் என்பது "இப்பொழுது' (Live in the present) என்ற மந்திரமே. ஒரு பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால், அவர் மனதில் ஓடும் பிற எண்ணங்களை   எல்லாம் முற்றிலும் ஒதுக்கி விட்டு, அந்தப் பிரச்னை பற்றி மட்டுமே சிந்தித்து அப்பொழுதே முடிவெடுப்பார். அந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவு உங்கள் தலைவிதியையே மாற்றியமைக்கும் என்பார். உங்களால் நிகழ்காலத்திற்காக வாழ முடியவில்லை என்றால், கடந்த காலத்தைப் பற்றியும் வருங்காலத்தைப் பற்றியும் வருத்தப்பட்டுப் பயனில்லை என்கிறார்.

6. நெப்போலியன் ஆடம்பரத்தையும், படை பரிவாரங்களையும் விரும்பினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் (Be thrifty) மிகச் சிக்கனமானவர். அவர் அரசவையைச் சேர்ந்தவர்களுக்கு "வெளியில் தாராளமாக இருந்தாலும், வீட்டில் சிக்கனமாகவும், மிக உலோபித்தனமாகவும் கூட இரு" என்று அறிவுறுத்தினார்.

அவர் இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். அவரது உடைகளும், இரண்டு வெல்வெட் தொப்பிகள் உட்பட, குறைந்த அளவில்தானிருக்கும்.

அவர் அறையிலுள்ள மேசை, நாற்காலி போன்ற பொருட்களெல்லாம் அவர் பெற்ற ஊதியத்திலிருந்து பெறப்பட்டவையே. அவர் சொந்த சேமிப்பாக இருந்தது அவர் பதவிக்காக பெற்ற 14 வருட சம்பளம் மட்டும்தான். அவர் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது 'சிக்கனமாக வாழுங்கள்' என்பதே.

7. எத்தகைய சூழ்நிலையிலும், அனைவரது மனத்திலும் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை முத்திரை பதிக்கும் திறமை (Leave an impression) பெற்றவர் நெப்போலியன். பிரெஞ்ச் புரட்சித் தலைவர் Maximilien Robespierre க்கு அவரது சகோதரர் Augustin 1794 ல் எழுதிய கடிதத்தில் Bonaparte நெப்போலியனின் பெயரை தம் நாட்டின் தேசாபிமானிகளின் பெயரில், 'ராணுவத்தின் பாராட்டுக்குரிய தளபதி'யாக சேர்க்கிறேன் என்று எழுதினார்.

எல்பாவின் ஆங்கில ஆணையாளர் Sir Neil Campbell, "என் வாழ்வின் எந்த சந்தர்ப்பத்திலும், நெப்போலியனைப் போன்ற தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் ஓய்வில்லாத தீவிர முயற்சி உடையவரைப் பார்த்ததில்லை" என்று தன் குறிப்பேட்டில் எழுதுகிறார். 

நெப்போலியனின் எதிரி பிரிட்டிஷ் படைத்தலைவர் வெலிங்டன் கோமகன் Arthur Wellesley, "போர்க்களத்தில் நெப்போலியன் ஒருவர் இருப்பது 40000 வீரர்களுக்குச் சமம்" என்பாராம். 

எனவே ஒவ்வொருவரும் நெப்போலியனின் வெற்றி ரகசியத்தைப் பின் பற்றினால், எல்லோரும் வாழ்க்கையில் உயர்வது உறுதி.

Sunday 18 November 2012

மரபணு மாற்ற உணவுகளால் ஆபத்து!

ஒவ்வொரு உயிரினத்திலும் அமைந்துள்ள இயல்புகளை, எடுத்துக்காட்டாக பழங்களின் சுவை, பூக்களின் மணம், மனிதனின் முகச்சாயல் போன்ற அம்சங்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (கடத்துவது) கொண்டு செல்வதற்கு அடிப்படையாக இருப்பவை ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள். ஓர் உயிரிலிருந்து மரபணுக்களைப் பிரித்து வேறு ஒரு உயிருக்குச் செலுத்தி அந்த உயிருக்கு புதிய குணாதிசயங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் இன்னும் தொடக்க நிலையில் தான் இருக்கிறது. “மரபணு மாற்று உணவு வகைகள் பாதுகாப்பானவையா?” என்று கண்டறிய வேண்டும் என்று ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

பேசில்லஸ் துரிஞ்செனிசஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு வகை பாக்டீரியா. இதன் துணை வகையான குர்ஸ்டகி என்ற பாக்டீரியா உருவாக்கும் நச்சுப் பொருட்கள் நெல்லுக்குப் பகையான தண்டு துளைப்பான் மற்றும் இலைச் சுருட்டுப் புழு ஆகியவற்றை அழிக்கக் கூடியவை. எனவே மேற்கூறிய பாக்டீரியாவிலிருந்து மரபீனியைப் (மரபணுக்களை) பிரித்து நெல்விதைக்குள் செலுத்துவன் மூலம் உருவாகும் புதிய நெற்பயிர் இலைச்சுருட்டுப்புழு, மற்றும் தண்டுத் துளைப்பான் புழுக்களைக் கொன்றுவிடும். இப்படிப்பட்ட நெல்வகைதான் பி.டி. நெல்.

மேற்குறிப்பிட்ட நெல் பயிரில் இருக்கும் நச்சுப்பொருள் இலையிலோ அல்லது தண்டில் மட்டுமேதான் தங்கும் என்பதற்கில்லை. அரிசியிலும் பரவி நிற்கும் ஆபத்து உண்டு. இதை உண்ணும் மனிதனுக்கு இந்த உணவு நச்சு உணவாக மாறும் அபாயம் உண்டு. இதனால் மனிதர்களுக்கு பலவகையான ஒவ்வாமை நோய்கள் தோன்றும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பிடி பருத்தி இலைகளைத் தின்ற நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒவ்வாமை நோயினால் இறந்ததை ஆந்திர அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

மன்சாட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலும் இந்த மரபணு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. ஆடுகளைப் போல மனிதர்களும் பலியாகாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியிருக்கிறது. வேளாண்மையையும், அறியா விவசாயிகளையும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலிலிருந்து விழிப்படையச் செய்வதன் மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளைத் தவிர்ப்போம். தரமான உணவுப் பொருட்களைப் பெறுவது நமது உரிமை, அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது நமது கடமை.

உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா?

சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் `ப்ரீ'யாக விட்டுவிடுவார்கள். அவ்வாறு செய்பவர்கள், ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று யோசித்திருக்க மாட்டார்கள். உங்கள் குழந்தையும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதற்கு காரணம், இதுதான்...
பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Thursday 15 November 2012

பெண்களுக்கேற்ற யோகா

* மாதவிடாய் கோளாறுகள் – வலியுடன் கூடிய உதிரப்போக்கு, அடிவயிற்றில் வலி, தசை இசிவு, வாந்தி, எரிச்சல் முதலிய பிரச்சனைகளுக்கு மாதவிடாயின் போது – வஜ்ராசனா, சசாங்காசனா இதர நாட்களில் – சூர்ய நமஸ்காரம், ஹாலாசனா, மத்ஸ்யாசனா, புஜங்காசனா, பத்தகோனாசனா, சலபாசனா, தனுராசனா, பஸ்சிமோத்தாசனா மற்றும் பிராணயாமம். யோகாசனங்களுடன் பிராணாயமம் (பஸ்திரிகா, கபால பூதி முதலியன செய்யலாம்). பந்தங்கள், யோகமுத்திரைகள் – மூல பந்தம், வஜ்ரோலி முத்திரை.
* கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஆசனங்களை நல்ல யோகா குருவிடமும், உங்கள் டாக்டரையும் கலந்தாலோசித்து மேற்கொள்ளவும்.
* இது மாதவிடாயின் போது ஏற்படும் அதீத போக்கு. இதற்கு உடல் உறுப்புக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆசனங்கள் – சூர்ய நமஸ்காரம், வஜ்ராசனம், உஷ்ட்ராசனம், சசாங்கசனம், விபரீத கரணி ஆசனம், சவாசனம். பிராணாயாமம் – பஸ்திரிகா, உஜ்ஜையி, நாடிசோதன் பந்தம் – மூல பந்தம், யோகநித்ரா.
* பெண்களின் அதீத உடல் பருமனுக்கு  – உடலுழைப்பும், நடமாட்டமும் குறைந்து விட்ட இந்த கால சூழ்நிலையில் பெண்களில் பலர் அதிக குண்டாகி விடுவது சகஜம். சுற்றுப்புற சூழ்நிலை மாசுகளும், ஹார்மோன் கோளாறுகளும் காரணமாகும்.

நான்ஸ்டிக் நல்லதா ???

 
உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருட்கள் கலப்பு அதிகரிப்பதால் அவை பல்வேறு வியாதிகளை ஏற்படுத்தி விடுகிறது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வெஸ்ட் விர்ஜினியா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,பெர்புளுரோகார்பன் என்ற வேதி பொருட்கள் இன்றைய காலத்தில் அதிகம் காணப்படுகிறது,அது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை.
இந்த தன்மையினால் இவ்வேதிப்பொருள் நான்ஸ்டிக் தவா,நான்ஸ்டிக் குக்கர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தபடுகின்றன.
இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய்,நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கபடுகிறது.
இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனேபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது என்றனர்.

Wednesday 7 November 2012

தேன்.......... உண்மை ........

தேனீ
மலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும்.
தேன் எவ்வாறு உருவாகிறது?
நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல.. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு , தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை.
தேனிலுள்ள சத்துக்கள்:
200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான சத்துப்பொருள்கள் தேனில் உள்ளன. இதிலிருந்தே தேனின் மகத்துவத்தை நாம் அறியலாம். அதாவது ஒன்றரை கிலோ மாமிசம், மற்றும் ஒன்றே கால் லிட்டர் பால் அளவிற்கு 200 கிராம் தேனில் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இது ஆச்சர்யம் கலந்த உண்மை.
யார் யாரெல்லாம் பருகலாம்?
தேனை யார் யாரெல்லாம் பருகலாம் என்ற விதிமுறையெல்லாம் கிடையாது. சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய்வாய்ப்பட்டவர்களும் பருகலாம். பிணி தீர்க்கும் மருந்துதான் தேன். அந்தக் காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தேனோடு மற்ற மருந்துகளை உண்ணக்கொடுப்பர்.
தேன் சாப்பிடுவதால் இரத்திலுள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) அதிகரிக்கிறது. குடல்புண்கள், ஜூரம், இருமல், இருதய நோய்கள்(Ulcer, fever, cough, heart disease) போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம், சீதிபேதி (Indigestion, DYSENTARY) போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
வயிற்றைச் சுத்தப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. இதிலுள்ள பொட்டாஷியம் மூட்டு வலையைப் போக்குகிறது.
வயதான பெரியவர்கள் அளவுடன் தேனை சாப்பிட்டு வர நீண்ட காலம் உடல்நலக் கோளாறில்லாமல் வாழ முடியும். குழந்தைகளுக்கு தேனை இரண்டு டீஸ்பூன் அளவுக்கு உணவில் கலந்து கொடுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று உபாதைகள் (Constipation, stomach problems) அனைத்தும் நீங்கிவிடும்.
தூக்கத்தைத் தூண்டும் தேன்:
குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டீஸ்பூன் அளவு தேனைக் கொடுத்தால், அதுவே தூக்கத்தை தூண்டும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும்.
தேன் தேனீக்கு மட்டுமல்ல.. மனிதனுக்கும் சிறந்த உணவாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல், இரைப்பை (Heart, lung, gastric) ஆகிய உறுப்புகளை வலுப்படுத்தும். அதோடு இரத்த நாளங்களிலும், குடலிலும்(Blood vessel, bowel ) சேருகின்ற அழுக்குகளை அகற்றி கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.
தேன் சிறுநீர் அடைப்பை (Urinary obstruction) நீக்கும்
தேன் மலச்சிக்கலை (Constipation) குணப்படுத்தும்
கபத்தால் (Phlegm) ஏற்படும் இருமல் போன்ற நோய்களுக்கு தேன் ஒரு சிறந்த நிவாரணி.
இளம்சூடான பாலில் சிறிதளவு தேன்கலந்து பருகினால் உறக்கம் உங்களைத் தழுவும்.
பெரும்பாலான மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கிய மருந்துப்பொருளாக சேர்க்கப்பட்டிருக்கும்.
தேனைப் பற்றிய ஒரு சில பயன்மிக்க தகவல்கள்:
1.தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.
2.மாதுளம் பழச்சாறுடன் (Pomegranate fruit) தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உருவாகும்.
3.எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
4.இஞ்சியுடன் (Ginger) தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.
5.ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
6.ரோஜாப்பூ குல்கந்தில் (Smooth rose) தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தனியும்.
7.நெல்லிக்காயுடன் (Indiangosseberry) தேன் கலந்து சாப்பிட 'இன்சுலின்' சுரக்கும்.
8.கேரட்டுடன் தேன்(Honey) கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.
இவ்வளவு பயனை அளிக்கும் தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் பற்றிய ஒரு சில தகவல்களையும் தெரிந்துகொள்வோமே..!
தேனீக்கள் பற்றிய சிறப்புத் தகவல்கள்:
1.மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது தேனீக்கள்.
2.புயல் (Storm) வருவதை முன்கூட்டியே உணரும் சக்தி தேனீக்கு உண்டு.
3.தேன் எடுக்கப் போகாத தேனீ ஆண் தேனீ.
4.ஒரு கிலோ தேனுக்கு ஆறு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் பூக்களை தேனீக்கள் சந்திக்கின்றன.
5.தேனீக்களின் எச்சமே (Residue of the bees) நாம் சுவைக்கும் தேன்.
6.ஒரு தடவை கொட்டியவுடன் தேனீ தனது கொடுக்கை இழந்துவிடும்.
7.தேனீ ஒரு சைவ உண்ணி
8.ஐந்து கண்களைக் கொண்டது தேனீ. எனவே தேனீயின் பார்வை மிக கூர்மையாக இருக்கும்.
9.தேனீக்களுக்கு இரைப்பைகள் இரண்டு.
10.ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான தேனீக்கள் உண்டு.
11.தேனீக்கள் வாழும் கூடுகள் அதனுடைய தேன்மெழுகினால் ஆனவையே.
12.தேனீக்கள் மூன்று வகைப்படும். (ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ, இராணித் தேனீ)
13.ஏராளமான நுண்ணறைகள் கொண்டது தேன்கூடு. மூன்று வகை தேனீக்களும் தனித்தனி அறைகளிலேயே வாழும்.
தேனீ நடனம்:
வேலைக்காரத் தேனீக்கள் தேன் இருக்கும் இடத்தை அறிந்து வந்து மற்றத் தேனீக்களுக்கு நடனமாடித் தெரிவிக்கின்றன. இதை தேனீக்கள் நடனம் என்கிறோம்.
1.ஒரு சொட்டுத் தேனை சேகரிக்க தேனீக்கள் பதினாறு மைல்தூரம் கூட பறந்து செல்கிறது.
2.மரத்தின் கிளை, கரடு முரடான பாறை இடுக்குகள் ஆகியவை தனக்கு ஏற்ற உறைவிடமாக (இருப்பிடமாக) தேனீக்கள் தேர்ந்தெடுக்கின்றன. தேனீக்களில் ராணித் தேனீயே (The Queen Bee) அனைத்து முட்டைகளையும் இடுகின்றது
3.தேனீயின் உடலில் 12 வளையங்கள் உள்ளன.
4.தேனீ நிமிடத்திற்கு அதிக பட்சமாக 400 முறை இறக்கையை அசைக்கும்.
5.எறும்பு இனத்தைச் சேர்ந்தது தேனீ.