நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Friday 30 December 2011

2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!

2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது.

இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது.

ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது எந்திரனுக்கு அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது!

ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.

இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. மங்காத்தா

அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 130 கோடி என்று கூறப்பட்டது.

ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஏஜீத், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம்.

2. காஞ்சனா

சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா!

3 கோடி செலவு, ரூ 30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, காஞ்சனா ஒரு உண்மையான 'ப்ளாக்பஸ்டர்' என்றால் மிகையல்ல.

3. எங்கேயும் எப்போதும்

எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது.

அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4. கோ

ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள்.

படத்தின் பெரிய பலம் இயக்குநர் கே வி ஆனந்த், ஹீரோ ஜீவா. ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா.

5. தெய்வத் திருமகள்

விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.

விக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா.

6. 7ஆம் அறிவு

இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம் அறிவு. காரணம், ரமணா, கஜினி தந்த ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது.

படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி. 2011 ஹிட் படங்களில் 7-ஆம் அறிவும் இடம்பெற்றுவிட்டது.

7. வேலாயுதம்


தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல்.

8. அவன் இவன்

இந்தப் பட்டியலில் அவன் இவனா... அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது!

விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையான இழப்பு பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்!

9. காவலன்

விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் காவலன். சுமாரான வெற்றிதான் என்றாலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் தந்தது இந்தப் படம். வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ். ரொம்ப நாளைக்குப் பிறகு விஜய் இந்தப் படத்தில் 'நடித்திருந்தது' குறிப்பிடத்தக்கது!

10. ஆடுகளம்

தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்!!). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின!

உலக அமைதிக்காக சிம்பு பாடிய பாடல்...!

பிரபல பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் நடிகர் சிம்பு.
இதுவரை லூசுப்பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான் போன்ற பாடல்களை எழுதி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும், பெண்கள் மத்தியில் அதிருப்தியையும் சம்பாதித்து கொண்ட சிம்பு,  பெண்களையும் திருப்திபடுத்தும் விதமாக, சமீபத்தில் ஒஸ்தி படத்தில் பொண்டாட்டி பாடலை எழுதினார். இந்தபாடலை கேட்டு பலரும் தங்களுக்கு வரப்போகிற கணவர் இப்படி இருக்கமாட்டாரா...! என்று பெண்களை ஏங்க வைத்தார்.
இந்நிலையில் இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபடி மேலே போய்,  உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் சேர்ந்து இந்த பாடலை உருவாக்கிறார் சிம்பு. 96 மொழிகளில் காதல் என்று பொருள்படும் வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு.  96 மொழிகளையும், பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு " என்று சிம்பு சொல்லியிருக்கிறார். மேலும் அன்புக்கான பாடலாக, உலகத்தின் அன்பு கீதமாக இந்த பாடல் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.நேற்று வெளியான இப்பாடல், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் தனுஷின் கொலவெறி பாடல், அவரை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இதனால் புகழின் உச்சியில் இருக்கிறார் தனுஷ். அதேபோல் சிம்புவும், தனுஷூக்கு நிகராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சி தான், இந்த உலக அமைதி பாடல் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

Thursday 29 December 2011

மறுபடியும் ரஜினி - ஷங்கர்?

ரஜினிகாந்தும் இயக்குநர் ஷங்கரும் மீண்டும் இணைந்து படம் பண்ணப் போகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தை கலக்கி வரும் பரபரப்பான.... வதந்தி!

கோச்சடையானுக்கு 10 நாட்கள் மட்டும்தான் ரஜினி கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும், அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு ஷங்கர் படத்தில் அவர் நடிப்பார் என்றும், ரஹ்மான் இசை அமைப்பார் என்றும் அந்த வதந்தி தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல... கதை விவாதம் கூட தொடங்கிவிட்டதாம்.

அப்ப ராணா... அது சந்தேகம்தான் என்கிறது இந்த வதந்தி.

இதுகுறித்து ரஜினி தரப்பில் விசாரித்தபோது, எந்திரன் வெளியான நேரத்திலிருந்தே இப்படித்தான் ஏதாவது ஒரு கதையை கிளப்பிவிடுகிறார்கள். அதற்கெல்லாம் முக்கியத்துவம் தரவேண்டாம் என்கிறார்கள்.

இப்போதைக்கு ரஜினியின் அடுத்த படம் கோச்சடையான்தான். அதற்கடுத்த படம் ராணா. வேறு எந்தத் திட்டமும் இல்லை என்றனர் உறுதியுடன்.

'துப்பாக்கி'யில் கெட்டப் மாறும் விஜய்!

துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.

பொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர் விஜய்.

'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.

இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.

மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.

Tuesday 27 December 2011

தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து!

ஊரே திட்டித் தீர்க்கிற அளவுக்கு விமர்சனங்களை கிளப்பியுள்ள தனுஷின் கொலவெறி பாட்டு, அவரை பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு 'உயர்த்தியுள்ளது'.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '3' படத்தில் 'ஒய் திஸ் கொலைவெறி டி..' என்ற தமிங்கிலீஷ் பாட்டை எழுதிப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடல் ஏக பிரபலம் ஆகிவிட்டது. யு ட்யூபின் கோல்ட் விருது இந்தப் பாடலுக்கு தரப்பட்டது. டைம் இதழில் தனுஷின் பெயர் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பாடலாசிரியர்கள், இசை விமர்சகர்கள் கடுமையாக இந்தப் பாட்டை விமர்சித்து வருகின்றனர். 'நேரடியான தமிழ்க் கொலை' இது என அவர்கள் சாடியுள்ளனர். ஏற்கெனவே தமிழ் சினிமா பாடல்களில் தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்துவிட்ட நிலையில், தனுஷின் இந்த 'தமிழ்க் கொலை' புதிய ட்ரெண்டை சினிமாவில் உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளும் 'நிதானத்தில்' தனுஷ் இல்லை. டெல்லி, மும்பை, ஹைதராபாத் என நகரம் நகரமாக மதுவிருந்துகளில் இந்தப் பாட்டை சக நடிகைகளுடன் பாடி ஆடி வருகிறார்.

இந்த நிலையில், தனுஷை தன்னோடு விருந்துண்ண அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை (டிசம்பர் 28) விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுஷுக்கு பிரதமர் அலவலகதத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.

ஏற்கெனவே கொலவெறி ஹிட்டால் மிதப்பிலிருந்த தனுஷ், இந்த புதிய கவுரவத்தால் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார். அர்த்தமில்லாத தனது பாட்டுக்கு புதுப்புது அர்த்தங்களைக் கற்பித்துக் கூறி வருகிறார்.

அவர் கூறுகையில், "கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் மிகுந்த அர்த்தம் உள்ளது. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவரையும் டச் பண்ணிவிட்டன. இந்த வரிகளில் உள்ள நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துக்கள் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்து விட்டன. அதுதான் எனக்கு இத்தனை பெரிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது," என்றார்.

Monday 26 December 2011

அமைச்சரவை விரைவில் மாற்றம்

தமிழக அமைச்சரவை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்று போயஸ் தோட்ட வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் அதிமுகவை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் ஏன் மாற்றப்படவில்லை என்று பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது தமிழக அமைச்சர்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்ற தகவல் கிடைத்தது.

இந்த அதிரடி மாற்றப் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர்கள்:
போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,தொழில்துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி வனத்துறை அமைச்சர் பச்சமால், வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்

உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் அல்லது அமைச்சர்கள் வகிக்கும் துறைகளாவது மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டெல்லி புறப்பட்டதும் இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

அமைச்சரவை மாற்றப்பட்டால் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசைய்யா தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்பதால்

அவரை மாநிலத்தை வி்ட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

நானும் எனது பாடலும் ...........


Friday 23 December 2011

டேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்-ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த, தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டேம் 999 படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

ரஹ்மானின் இந்த வேண்டுதல், முல்லைப் பெரியாறு அணைக்காக போராடி வரும் அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்துள்ளது. ஒரு தமிழராக இருந்து கொண்டு ரஹ்மான் இப்படிச் சொல்லலாமா என்று அனைவரும் குமுறுகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச அளவில் பிரச்சினையாக்க மலையாளத்தைச் சேர்ந்த சோஹன் ராய் என்பவர், வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகளின் நிதியுதவி மற்றும் கேரள அரசின் முழு ஆதரவுடன் உருவாக்கிய படம்தான் இந்த டேம் 999. ஹாலிவுட் தயாரிப்பாக இதை உருவாக்கி சர்வதேச அளவில் வெளியிட்டு தமிழகத்திற்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படுத்தவே இந்த விஷமப் படத்தை எடுத்தார் ராய். அந்த விஷமத்தின் காரணமாகத்தான், முல்லைப் பெரியாறு அணையின் 999 ஆண்டு குத்தகையைக் குறிப்பிடும் வகையில், டேம் 999 என்று தனது படத்துக்குப் பெயரும் வைத்தார்.

ஆனால் இது முல்லைப் பெரியாறு அணை கதை இல்லை என்று ஊர் ஊராகப் போய் விளக்கிய அவர் கூடவே, முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறார். இந்தப் படத்தில் ஒரு அணை உடைந்து பல லட்சம் பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல கிராபிக்ஸ் காட்டியிருக்கிறார்கள். இது மக்கள் மனதில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது போல உள்ளதால், தமிழக அரசும் இப்படத்தை தடை செய்து விட்டது.

இந்தப் படத்தின் இரு பாடல்கள் தற்போது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். அதில் அப்பாடல்கள் வெற்றி பெறத்தான் ரஹ்மான் வாழத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், ஆஸ்கர் விருதுக்கான படங்களின் போட்டியில் டேம் 999 திரைப்படமும், அதன் பாடல்களும் சேர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடல்களில் ஏதாவது ஒன்றாவது ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் ரஹ்மான்.

தமிழகத்தில் பெரும் புயலையும், சர்ச்சையையும் கிளப்பிய இப்படத்துக்கு ஆதரவாக இசைப் புயல் கருத்து தெரிவித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாமே...!

Thursday 22 December 2011

பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.

Wednesday 21 December 2011

உலகின் காஸ்ட்லி ஆப்ரோடு குவாட் பைக் அறிமுகம்



கரடு முரடான சாலைகளில் அனாயசமாக செல்லும் ஆற்றலும், வடிவமைப்பும் கொண்ட புதிய குவாட் பைக்கை பிரான்சை சேர்ந்த லாசரேத் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வஸுமா வி8 என்ற பெயரில் வந்துள்ள இந்த குவாட் பைக் கார் போன்று நான்கு சக்கரங்களை கொண்டுள்ளது. இதில், ஃபெராரி கார்களில் பொருத்தப்படும் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

அதிகபட்சம் 250 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த பைக் அதிகபட்சம் மணிக்கு 240 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.

பார்ப்பதற்கு ரேஸ் கார் போன்று இருந்தாலும், இதில் ஸ்டீயரிங் வீலுக்கு பதில் மோட்டார்சைக்கிள்களில் உள்ளது போன்று ஹேண்டில் பார் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஹேண்டில் பார் பிஎம்டபிள்யூ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதன் அகலமான டயர்கள் இந்த பைக் அதிவேகத்தில் சென்றால் கூட அதிக ரோடுகிரிப்பை கொடுக்கும்.

இந்த பைக் ரூ.1.40 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பிறந்தநாள் விளம்பர செலவு ரூ.7.25 கோடி

முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி நாளிதழ்களில் விளம்பரம் செய்ய மத்திய அரசு ரூ.7.25 கோடி செலவு செய்துள்ளது.

இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் சி.எம். ஜதுவா ராஜ்சபையில் கூறியதாவது,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்க மத்திய அரசு ரூ. 4,79,73,656 செலவு செய்துள்ளது. அதில் சுகாதார அமைச்சகம் தான் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் செய்துள்ளது. இதை தொடர்ந்து புதிய மற்றும் மறுசுழற்சி மின் சக்தி அமைச்சகம் ரூ.82 லட்சமும், சுற்றுலா அமைச்சகம் ரூ. 79 லட்சமும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் ரூ. 65 லட்சமும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ரூ.58 லட்சமும், சமூக நீதி அமைச்சகம் ரூ.51 லட்சமும் செலவு செய்துள்ளன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.25 லட்சமும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ரூ. 21 லட்சமும் விளம்பரத்திற்காக செலவு செய்துள்ளன.

இது தவிர முன்னாள் பிரதமர் இந்திர காந்தி பிறந்தநாளையொட்டி விளம்பரம் செய்ய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ரூ.60 லட்சமும், சமூக நீதி அமைச்சகம் ரூ.56 லட்சமும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ரூ. 41 லட்சமும், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ரூ. 25 லட்சமும், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ரூ.22 லட்சமும், நீர் வளம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்கள் ரூ. 19 லட்சமும் செலவு செய்துள்ளன என்றார்.

விரைவில் அறிமுகமாகும் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபியட் புன்ட்டோ ,லீனியா

கூடுதல் வசதிகளுடன், மேம்படுத்தப்பட்ட புதிய லீனியா செடான் கார் மற்றும் புதிய புன்ட்டோ ஹேட்ச்பேக் கார்களை வரும் ஜனவரியில் ஃபியட் அறிமுகம் செய்கிறது.

டாடா ஷோரூம்களில் கார் விற்பனை செய்து வரும் ஃபியட் நிறுவனம் விரைவில் தனியாக புதிய ஷோரூம்களை அமைத்து கார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்கான, முதற்கட்ட பணிகளில் அந்த நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தனது லீனியா மற்றும் புன்ட்டோ கார்களில் கூடுதல் வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் விரைவில் அறிமுகம் செய்கிறது ஃபியட்.




புதிய லீனியா:

மிட்சைஸ் கார்களுக்கான மார்க்கெட் நன்கு வளர்ந்து வருவதால், அதில் லீனியாவும் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஃபியட் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை கொடுத்துள்ளது.




புதிய லீனியாவில் மழை வந்தால் தானாக இயங்கும் ரெயின் சென்சிங் வைப்பர், அதிக திறன் வாய்ந்த ஏசி, இந்திய சாலை நிலைகளுக்கேற்ப கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ்(185மிமீ), டியூவல் டோன் பியேஜ் இன்டிரியர்ஸ் ஆகிய புதிய அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் புதிய லீனியா வருகிறது.

மேலும், ஆட்டோ ஆன்/ஆப் ஹெட்லைட்டுகள், புதிதாக நீல வண்ணத்திலும் லீனியா வர இருக்கிறது. புதிய லீனியா நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று ஃபியட் கருதுகிறது.

புதிய புன்ட்டோ:

லீனியா போன்றே புன்ட்டோ ஹேட்ச்பேக் காரும் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வருகிறது. புதிய புன்ட்டோ 1.3 லிட்டர் எஞ்சின் மாடல் மேம்படுத்தப்பட்ட கியர் பாக்சுடன் வருகிறது.

தவிர, 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்(195மிமீ)
கொண்டதாகவும், 1.4 லிட்டர் வேரியண்ட் 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் இருக்கும். லீனியா போன்றே புதிய புன்ட்டோவும் புதிய நீல வண்ணத்தில் கிடைக்கும் என்று ஃபியட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த 2 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்கள் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்த ஃபியட் திட்டமிட்டுள்ளது. மேலும், கார்களின் விலையை வரும் ஜனவரி முதல் 2 சதவீதம் உயர்த்த இருப்பதாக ஃபியட் ஏற்கனவே அறிவித்துவிட்டதால், புதிய மாடல்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

வால்வோவுக்கு போட்டியாக டாடா ஆம்னி பஸ்

நகரங்களுக்கு இடையில் இயக்கும் வகையிலான புதிய ஆம்னி பஸ் மற்றும் புதிய ஸ்கூல் பஸ் மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கான மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் வால்வோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், வால்வோ பஸ் மார்க்கெட்டை உடைக்கும் வகையில், அனைத்து சொகுசு வசதிகளும் அடங்கிய திவோ என்ற பெயரில் புதிய சொகுசு பஸ் மாடலை டாடா அறிமுகம் செய்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு தக்கவாறு திவோ பஸ்சில் சொகுசு வசதிகளை கஸ்டமைஸ் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவோ சொகுசு பஸ்சுக்கான பாகங்கள் ஸ்பெயினில் உள்ள டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனமான ஹிஸ்பானோ கர்ரோசிராவின் ஆலையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

திவோ சொகுசு பஸ்சில் 285 எச்பி ஆற்றல் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஸ்கூல் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் புதிய ஸ்டார்பஸ் அல்ட்ரா என்ற புதிய பஸ் மாடலையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

22 இருக்கைகள் முதல் 46 இருக்கைகள் வரையிலான மாடல்களில் கிடைக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


திவோ சொகுசு பஸ் ரூ.66 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஸ்டார்பஸ் அல்ட்ரா பஸ் ரூ.15 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சசிகலா நீக்கப்பட்டதின் பின்னணி .........

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு நிச்சயம் ஆபத்து வரும், அப்போது அடுத்த முதல்வராக யாரைப் போடலாம் என்று ஜோசியரிடம் ஜாதகத்துடன் போனதால்தான் சசிகலா குரூப்புக்கு முதல்வர் ஜெயலலிதா ஆப்பு வைத்து விட்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா இடையிலான பிளவுக்கு என்ன காரணம் குறித்த 'உளவுத் தகவல்கள்' தொடர்ந்து கசிந்தவண்ணம் உள்ளன. பல காரணங்களை இதற்கு அடுக்குகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது போயஸ் தோட்ட வீட்டுக்குள் ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டும் இதுவரை தங்கியிருக்கவில்லை, மாறாக ஏராளமான ரகசியங்களும் சேர்ந்து குடித்தனம் செய்துள்ளது தெரிய வருகிறது.

ஜெயலலிதாவிடமிருந்து சசிகலா நீண்ட காலத்திற்கு முன்பே மனதளவில் பிரிய ஆரம்பித்து விட்டதாக கூறுகிறார்கள். குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு பாதகமாக ஜெயலலிதா மாறக் கூடும் என்று சசிகலா தரப்பு 'கெஸ்' செய்ய ஆரம்பித்து விட்டதாம். இதனால்தான் அடுத்தது என்ன என்று அட்வான்ஸ்டாக யோசிக்கு ஆரம்பித்துள்ளது இந்தக் கூட்டம்.

இதற்காக ஜெயலலிதாவுக்காக யாருடனெல்லாம் பேசாமல் இருந்தாரோ அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார் சசிகலா. அவர்களுடன் ரகசியமாகவும் சந்தித்துப் பேசியுள்ளார். சிலர் போயஸ் தோட்ட வீடு வரைக்கும் கூட வந்து போயுள்ளனராம். இந்த ரகசிய சந்திப்புகளுக்கு கார்டனில் உள்ள சசிகலா ஆதரவு காவல்துறை அதிகாரிகள் உடந்தை என்று கூறப்படுகிறது.

மேலும் பெங்களூர் கோர்ட்டுக்கு விசாரணைக்கு சசிகலா வந்தபோதும் இந்த ஜெயலலிதாவுக்கு வேண்டப்படாதவர்கள் வந்து சசிகலாவைப் பார்த்து முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். இதெல்லாம் ஜெயலலிதாவின் காதுகளுக்கு அவருக்கு விசுவாசமான அதிகாரிகள் மூலம் போயிருக்கிறது.

அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை மட்டும் பக்குவாகமாக, பாதுகாப்பாக கொண்டு வருவது குறித்து முக்கிய சட்ட நிபுணர் ஒருவருடன் சசி தரப்பு ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளதாம்.

மேலும் திமுக தரப்பைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களுடனும் கூட சசிகலாவுக்குத் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் ஜெயலலிதாவை அதிர வைத்துள்ளது.




 

இதை விட ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், ஜெயலலிதாவுக்குப் பிறகு யாரை முதல்வராக்குவது என்ற மந்திராலோசனையில் சசிகலா தரப்பு ஈடுபட்டதுதான். இதற்காக முக்கிய ஜோதிடரையும் போய்ப் பார்த்துள்ளனர். அப்போது இரண்டு அமைச்சர்களின் ஜாதகங்களையும் கொடுத்து இதில் யார் எங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள் என்றும் ஆலோசனை கேட்டுள்ளனராம்.

இதெல்லாம் ஜெயலலிதாவை கடும் அதிர்ச்சியிலும், ஆவேசத்திலும் தள்ளி விட்டு விட்டது. இதனால்தான் சசிகலா மீது கடும் கோபம் கொண்டு அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக விரட்டியுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

மொத்தத்தில் சமீப காலமாக தனக்கு வெளியில் உள்ள எதிரிகளை விட உள்ளுக்குள்ளேயே, அதுவும் கூடவே இருப்பது ஜெயலலிதாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதால்தான் தனது கொடநாடு பயணத்தைக் கூட தள்ளிப் போட்டு விட்டு முதலில் வேரறுப்பு வேலைகளில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுவிட்டதை 2 வகையாக பார்க்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

1. உண்மையிலேயே அவரை முதல்வர் ஜெயலலிதா வெளியேற்றிவிட்டார்.

2. பெங்களூர் நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வேகத்தை தாமதப்படுத்தவே இந்த அறிவிப்பு, இது தாற்காலிகமாக நீக்கம் என்கிறார்கள்.

இதில் எது உண்மை எது பொய் என்பது, இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் அடுத்து தாக்கல் செய்யும் மனுக்களை வைத்து ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

உண்மையிலேயே சசிகலாவை குடும்பத்தை கூண்டோடு ஜெயலலிதா வெளியேற்றிவிட்டார் என்பதை நம்புவோர் அதற்காக சொல்லும் முக்கிய காரணங்களில் ஒன்று அரசு அதிகாரிகள் இடையே ஏற்பட்ட ஜாதிரீதியிலான மோதல் என்கிறார்கள்.

சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜனுக்கு ஆகியோர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே முக்கிய பதவிகளில் அமர வைத்ததாகவும், இதற்கு நடராஜனுக்கு நெருக்கமான அதிகாரிகள் துணை போனார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், சில முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் முதல்வருக்கு மிக நெருக்கமான 'அட்வைசரிடம்' விஷயத்தைச் சொல்ல, அவர் இதை முதல்வருக்கு புரிய வைத்ததாகவும், இதையடுத்தே சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளான சிறப்புத் திட்டங்கள் அமலாக்கல் பிரிவு அதிகாரியான பன்னீர்செல்வம், உளவுப் பிரிவின் தலைவர் பொன்.மாணிக்கவேல், சிவனாண்டி ஆகியோரை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அடுத்தடுத்து அதிரடியை முதல்வர் ஆரம்பித்தார் என்கிறார்கள்.

சசிகலா தரப்பை ஒழித்துக் கட்ட இந்த அட்வைசர் நீண்டகாலமாகவே முயன்று வந்தார். ஆனாலும் அவரது முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந் நிலையில் தான் பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது சசிகலா தரப்பினர் நடந்து கொண்ட விதம் பல சந்தேகங்களைக் கிளப்ப, அதையே 'மையக் கருவாக' வைத்து, சசிகலா தரப்பினரை காலி செய்துவிட்டார் அட்வைசர் என்கிறார்கள்.

நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜரானபோது அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்காத, சசிகலாவின் உறவினர்கள், சசிகலாவும், இளவரசியும், சுதாகரனும் ஆஜரானபோது பாசத்தோடு ஓடி வந்ததாகவும், போயஸ் கார்டனில் தடை விதிக்கப்பட்ட சுதாகரன், தனது சித்தி சசிகலாவுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வந்து சேர்ந்தன.

இதில் பாதி விஷயங்களை மட்டும் முதல்வருக்கு பாஸ் செய்த உளவுத் துறை, மீதியை 'எடிட்' செய்துவிட்டதாகவும் தகவல் உள்ளது. இந்த விவரங்கள் முதல்வருக்கு முழு அளவில் வேறு சோர்ஸ்கள் மூலம் வந்து சேர்ந்தவுடன் நடந்தது தான் உளவுப் பிரிவு தலைவர் பொன்.மாணிக்கவேலின் நீக்கம் என்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கால், பதவிக்கே பிரச்சனை வரலாம் என்ற அச்சம் பரவியுள்ள நிலையில், மன்னார்குடியினர் உளவுப் பிரிவிலும் கூட தலையிட்டு தனது கண்களை மறைப்பதை முதல்வர் உணர, அதிகாரிகள் மூலம் கிடைத்த இதே தகவல்களை வைத்து அட்வைசரும் முதல்வருடன் பேச, சசிகலா தரப்பினருக்கு கட்டம் கட்டப்பட்டது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு தரப்பினரோ, சசிகலாவின் நீக்கமே ஒரு செட்-அப் தான் என்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் அடுத்தபடியாக, தங்களுக்கு சாதமாக காய் நகர்த்த இந்த நாடகம் தேவைப்படுகிறது என்கிறார்கள்.

1996ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் பெயர் கெட்டுப் போய் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றது. இதையடுத்து வந்த திமுக அரசு சசிகலாவை கைதும் செய்தது. உடனடியாக, சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையானவுடன் சசிகலா போய் சேர்ந்த இடம் போயஸ் கார்டன் தான்.

ஆக, இந்தமுறையும் வழக்கை மனதில் வைத்துத் தான் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்.

Friday 25 November 2011

விஜய் அடுத்து நடிக்கும் துப்பாக்கி !

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில்எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

நண்பன் படத்தை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் விஜய் நடிக்கும் இந்த படத்திற்க்கும் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது


அகத்தீசுவரர் கோயில், தாராபுரம்



காலை 6.30 முதல் பகல் 11.30 மணி, மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
நாம் எல்லாவற்றிலுமே வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், பல முட்டுக்கட்டைகள் நம் இலக்கை அடையவிடாது தடுக்கின்றன. இவற்றையெல்லாம் தகற்துத் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளுகிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு அருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்த போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லுமாறு, அகத்தியருக்கு சிவன் கட்டளையிட்டார். அங்கு செல்லும் வழியில், அகத்தியர் பல இடங்களில் இலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டார். அமராவதி ஆற்றங்கரைக்கு வந்த போது, மணலில் ஒரு இலிங்கம் வடித்தார். அகத்திஸ்தியர் வடித்த இலிங்கம் என்பதால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், இலிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் வடிக்கப்பட்டது. இந்த ஊரே தற்போதைய தாராபுரம்.
பஞ்சபாண்டவர்கள் ஒரு ஆண்டு இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. திருமலை சுவாமி சித்தர் வழிபட்டுள்ளார். ராமேசுவரம், கும்பகோணம், காஞ்சிபுரம் நகரிலுள்ள கோயில்களில் உள்ள மணல் இலிங்கங்களுக்கு அபிசேகம் நடப்பதில்லை. ஆனால், இங்கு தினமும் அபிசேகம் நடந்து வருகிறது. எண்ணெய் காப்பு சாத்தும் முன் இந்த இலிங்கத்தில், மணலில் சேர்ந்துள்ள “காக்கா பொன்” என்னும் துகள் ஒளிர்வதைக் காணலாம். இந்த இலிங்கத்தை இங்கு நிறுவுமுன், இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகத்தியர், இவ்வூரில் காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அது முடியாமல் போனதால், அமராவதி ஆற்றை கங்கையாக எண்ணி, அதிலுள்ள மணலை பிடித்தே இலிங்கம் வடித்தார். இதனால், தடையில்லாமல் விரைவில் செயல்களை முடிக்க இந்த அகத்தீசுவரரை வணங்குகின்றனர். குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கவும், படித்து முடித்ததும் தாமதமின்றி வேலை கிடைக்கவும், முன்னேற்ற திருப்பங்கள் ஏற்படவும் பூஜை செய்து வரலாம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூதங்களையும் வணங்கும் வகையில் ஒரே சன்னதியில் ஐந்து இலிங்கங்கள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இவை உயரத்தில் மாறுபட்டவை. சிவராத்திரி மற்றும் பிரதோச காலங்களில் பஞ்சலிங்கங்களை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளும் கிடைக்கும். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி அம்பிகை சன்னதியில், கன்னியர்கள் திருமணத் தடையை நீக்கவும், திருமணமான பெண்கள் சுமங்கலி பாக்கியம் வேண்டியும் வழிபடுகின்றனர். அமராவதி ஆற்றில் குளித்து ஈரப்புடவையுடன் அம்பாளை பயபக்தியுடன் வணங்குவதை காணமுடிகிறது . அத்துடன் அம்பாள் சன்னதியிலோ, வீட்டிலோ திரிசதி 300 நாமாவளியை ஐந்து அல்லது ஒன்பது வெள்ளிக்கிழமை பூஜித்து வந்தால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

கோயில் வாசலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி எழுந்தருளியுள்ளார். பெருமாளை வணங்கிவிட்டு அகத்தீசுவரர் கோயிலுக்கு உள்ளே செல்லும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெருமாள் மனக்குறையைத் தீர்த்து வைப்பவராக உள்ளார்.

Wednesday 23 November 2011

Vithagan - Joshua Sridhar

Vithagan - Joshua Sridhar

Vithagan Tamil Movie, Vithagan Songs Free Download Music By Joshua Sridhar - Vithagan

Featuring : R. Parthiban, Poorna

Production : 7th Channel
Starring : R. Parthiban, Poorna
Director : R. Parthiban
Lyrics : R. Parthiban 

கொலை வெறி டி' பாடலுக்கு 18 லட்சம் ஹிட்!

மிழ்த் திரை இசை ரசிகர்கள் ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர். நடிகர் தனுஷ் தமிழையும், ஆங்கிலத்தையும் மிக்ஸ் செய்து, எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியாக உருவாக்கிய ஒய் திஸ் கொலை வெறி டி என்ற தமிங்கிலீஷ் பாடலுக்கு யூடியூபில் இதுவரை 18 லட்சம் ஹிட்கள் கிடைத்துள்ளதாம்.

3 என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவரது மனைவி ஐஸ்வர்யாதான் இதன் இயக்குநர். ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில்தான் இந்த ஒய் திஸ் கொலை வெறிடி என்ற வித்தியாசமான பாடல் இடம் பெற்றுள்ளது.

தமிழையும் ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து எந்த மொழிப் பாடல் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்கு ஒரு வித்தியாசமான பாடலாக இது உருவாகியுள்ளது. இந்தப் பாட்டுக்குத்தான் திரை இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

 

இந்தப் பாடலை அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியிட்டனர். அதற்கு முன்பே இந்த பாடல் இணையதளங்களில் லீக் ஆகி விட்டது. இப்போது அந்தப் பாட்டுக்கு இதுவரை 18 லட்சம் ஹிட்கள் கிடைத்துள்ளதாம்.

தென்னிந்திய திரை இசை வரலாற்றிலேயே ஒரு பாடலை இத்தனை பேர் மாய்ந்து மாய்ந்து கேட்டது இதுவே முதல் முறையாகுமாம். அந்த வகையில் இது ஒரு சாதனை என்கிறார்கள்.

பாடல் வெளியாகி 4 நாட்களிலேயே இத்தனை பேர் கேட்டிருப்பது பெரிய சாதனை என்று கூறப்படுவதால் தனுஷும், ஐஸ்வர்யாவும் சந்தோஷமாகியிருக்கிறார்களாம்.


Song download here
Tamil Movie 3
Cast : Dhanush,Shruti Haasan,sivakarthikeyan
Music Director : Anirudh
Director : Aishwarya Dhanush
Produced by : Kasthuri Raja


Why this Kolaveri di Song - Download

Tuesday 22 November 2011

ஒஸ்தி பாடல்கள் இலவசம்



  Osthi (2011) 

Actors Simbu, Richa, Jithan Ramesh 
Director Dharani
Music Director : Thaman S
Producer Balaji Real Media Pvt Ltd
Website :
 



 Pondati 
   Singer : Silambarasan 
 Unnale Unnale 
   Singer : Thaman S, Rita
 Osthi Maamey 
   Singer : Baba Sehgal. Ranjith, Rahul Nambiar, Naveen
 Kalasalla 
   Singer : L.R.Easwari, T.Rajendar, Solar Sai 
 Neduvaali 
   Singer : Rahul Nambiar, Mahathi



Download Mirrors:


Monday 21 November 2011

புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை






கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.
இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.


கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும். இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது.


ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.


ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து.


சிறிய அளவில் எடுத்துக் கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு. திராட்சைப் பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள்.


அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாத உடம்புக்குள்ளானவர்களும் அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

Friday 18 November 2011

டாட்டா நானோ டீசல் கார்

பெரும் ஆவலைத் தூண்டியுள்ள டீசல் நானோ காரை வரும் மார்ச்சில் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்கெட்டில் டீசல் நானோ நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து கார் நிறுவனங்களும் டீசல் கார்களை அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அதிக மைலேஜ், மிகக்குறைந்த விலை என்ற அஸ்திரத்தோடு டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ள டீசல் நானோ கார் மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஏஆர்ஏஐ நடத்திய சோதனை ஓட்டங்களில் டீசல் நானோ கார் லிட்டருக்கு 30கிமீ முதல் 34 கிமீ வரை மைலேஜ் தருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்திய மார்க்கெட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் காராகவும் நானோ டீசல் மாடல் இருக்கும் என மார்க்கெட் பரபரக்கிறது.

இந்த நிலையில், வரும் மார்ச்சில் டீசல் நானோ காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் அறிமும் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் மாடலை விட கூடுதல் விலை கொண்டதாக நானோ வந்தாலும் மற்ற நிறுவனங்களின் டீசல் கார்களின் விலையை ஒப்பிடும்போது நானோ டீசல் விலை குறைந்ததாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday 15 November 2011

புதிய பார்ச்சூனர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய டொயோட்டோ தீவிரம்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய பார்ச்சூனர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய டொயோட்டோ ஆயத்தமாகி வருகிறது. இதற்காக, பெங்களூரில் புதிய பார்ச்சூனர் சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் எஸ்யூவி என்ற பெருமையை டொயோட்டோ பார்ச்சூனர் தக்க வைத்து வருகிறது. கம்பீரமான தோற்றம், சொகுசு என அனைத்திலும் நெஞ்சை அள்ளும் பார்ச்சூனர் இந்திய வாடிக்கையாளர் நெஞ்சங்களில் தனி இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், மார்க்கெட்டில் புதிது புதிதாக ஏராளமான எஸ்யூவி மாடல்கள் வந்த வண்ணம் இருப்பதால் பார்ச்சூனர் எஸ்யூவியை மேம்படுத்தி அறிமுகம் செய்ய உள்ளது டொயோட்டோ. மேலும், பெங்களூரில் புதிய பார்ச்சூனர் எஸ்யூவியின் சோதனை ஓட்டங்களை அந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

புதிய எஸ்யூவி 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள் கூடுதல் அகலத்துடனும், புதுப்பொலிவுடனும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முன்பக்க கிரில்லிலும் கூடுதல் குரோம் பூச்சுடன் வரும் என்று தெரிகிறது
. அடுத்த ஆண்டு இந்த புதிய பார்ச்சூனர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், போட்டியை எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதமாக குறைந்த விலையில் 2 வீல் டிரைவ் பார்ச்சூனர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய டொயோட்டோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Monday 14 November 2011

சுட்ட கவிதை .....

 சில நாட்களுக்கு முன்னர் வலையில் உலா வந்த போது என் கண்ணில் சிக்கிய சில கவிதைகள் உங்களால் பார்வைக்கு.....

அல்லது - பெண்!

கருவில் சுமந்து
உயிர் கொடுத்த தாயாக!
அல்லது,
அவளே என்னைப் படைத்த
கடவுளாக!

கைப் பிடித்து
கொஞ்சி விளையாடும் சகோதரியா!
அல்லது,
அவளே எனக்கு பாசவலையிட்ட
உயிராக!

உணர்வை பகிர்ந்து
இறுதிவரை தோள்கொடுத்த தோழியாக!
அல்லது,
அவளே என்னை உற்சாகமூட்டவந்த
தேவதையாக!

மனதை திருடி
உயிருடன் கலந்த காதலியாக!
அல்லது,
அவளே எனக்கென்று பிறந்த
அழகியாக!

மாலையிட்டு மணக்கோலத்துடன்
வாழ்க்கையை பகிரவந்த மனைவியாக!
அல்லது,
அவளே எனக்கு மற்றுமொரு
தாயாக!

கொஞ்சும் மொழியில்
என்னை மறக்கசெய்யும் மகளாக!
அல்லது,
அவளே எனக்கு இறைவனளித்த
பரிசாக!

இந்த உலகை
சொர்க்கமாக்க வந்த பெண்களாக!
அல்லது,
இவர்கள் இல்லா உலகம்
சூன்னியமாக!



இமயம் வேண்டாம்...
 


எனக்கு இமயம் வேண்டாம்
குன்று போதும்
அல்லது
ஒரு கல்துண்டு மட்டும்!

எனக்கு கங்கை வேண்டாம்
நீரோடை போதும்
அல்லது
இலையில் ஓர் துளி மட்டும்!
எனக்கு வானம் வேண்டாம்
மேகம் போதும்
அல்லது
ஒரு நட்சத்திரம் மட்டும்!

எனக்கு ஆழ்கடல் வேண்டாம்
அலைகள் போதும்
அல்லது
அதன் சிதறல் மட்டும்!




எனக்கு பெருமழை வேண்டாம்
தூறல் போதும்
அல்லது
மண்வாசம் மட்டும்!

எனக்கு வைரம் வேண்டாம்
பவளம் போதும்
அல்லது
ஒரு முத்து மட்டும்!

எனக்கு நூலகம் வேண்டாம்
புத்தகம் போதும்
அல்லது
ஒரு தாள் மட்டும்!

எனக்கு மதங்கள் வேண்டாம்
கடவுள் போதும்
அல்லது
மந்திரச்சொல் மட்டும்!

 
எனக்கு சூரியன் வேண்டாம்
நிலவு போதும்
அல்லது
ஒரு மின்மினி மட்டும்!

எனக்கு காதல் வேண்டாம
நினைவுகள் போதும்
அல்லது
ஒரு முத்தம் மட்டும்!

எனக்கு சரித்திரம் வேண்டாம்
சம்பவங்கள் போதும்
அல்லது
ஒரு சாகசம் மட்டும்!

எனக்கு மெத்தைகள் வேண்டாம்
தாய்மடி போதும்
அல்லது
ஆறடி பூமி மட்டும!

இவை எல்லாம் நடக்க வேண்டாம்
எல்லோரும் நினைக்கவாவது வேண்டும்
அல்லது
இப்படி நிழல்களில் மட்டும்!






நன்றி : http://kolipaiyan.blogspot.com/

Friday 28 October 2011

என்ன குறை கண்டாய் பெண்ணே ?


கணவன் மனைவி சம்பந்த பட்ட குடும்ப விசயத்தில் ஆண், பெண் என்று  பாகுபடுத்தி பார்ப்பதே தவறு. பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று குரல் கொடுக்கலாம் தவறில்லை ஆனால் அதற்கான இடம் குடும்பம் அல்ல !!

பொதுவாக இப்படி பெண்ணுரிமை, சம உரிமை  என்று குரல் கொடுத்து கொண்டிருப்பதால் வீட்டிலும், குடும்பத்திலும் அது எதிரொலித்து எல்லா பிரச்சனைக்கும் ஒரு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. குடும்பம்  வேற...மேடை பேச்சு வேற... புரிந்து கொண்ட பெண்களின் இல்லங்களில் குதூகலமும், புரிந்து கொள்ளாமல் கொடி பிடிப்பவர்களின் வீட்டில் குளறுபடிகளும் கும்மி அடிக்கின்றன !!

மனைவி கணவனுக்கு சமம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பலரது வீடுகளிலும் மனைவியின் கை தானே ஓங்கி இருக்கிறது...சில வீடுகளில் மனைவி தனக்கு தேவையான உரிமையை மட்டும்  எடுத்துக்கொள்கிறாள், சில வீடுகளில் வலிந்து பெற்றுக்கொள்கிறாள், பல வீடுகளிலும் முழு உரிமையையும் எடுத்துகொண்டு குடும்பத்தை வழி நடத்துகிறாள்...இதுதான் இன்றைய நிதர்சனம்.ஆண்கள் விட்டுகொடுத்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார்கள், அவர்கள் ஆளுமை செய்த காலம் குடும்பத்தை பொறுத்தவரை மிக குறைந்து விட்டது. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)

அத்தகைய பெண்களில் சிலர் 'தான் சொல்வதே சரி' என்பது போல் நடந்து சிக்கல்களை உருவாக்கி கொண்டே செல்கிறார்கள்.

குடும்பத்தைக் கெடுக்கும் அறிவுரைகள் ?!!
  
மனப்பொருத்தம் என்பது ஏதோ கடையில் வாங்கும் பொருளல்ல...இரு மனமும் பொருந்தியதே திருமணம் என்று பெரியவர்கள் சொல்லி வச்சாங்க. இப்போது திருமணம் ஒருவழியாக பொருந்திவிடுகிறது, ஏனோ இரு மனங்கள்  பொருந்துவதே இல்லை. பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் மனம் பொருந்தவில்லை என்றால் அது நரக வாழ்க்கை. மனம் பொருந்தாமைக்கு கணவன் மனைவி மட்டும் காரணம்  இல்லை,பெண்களை பொறுத்தவரை திருமணத்தின் போதே அவர்களுக்கு ஓதப்படும் தவறான அறிவுரைகள்....!!?

* கணவனை கைக்குள் போட்டுக்கோ
* மாமியார், நாத்தனாரை தூரமா வை.
* கொஞ்ச நாள் போனதும் தனிக்குடித்தனம் போற வழியைப் பாரு. 
* எந்த முடிவும் நீ எடு, அடக்கி வை.

இந்த நான்கில் ஒன்றாவது நிச்சயம் எல்லா குடும்பத்திலும் திருமணத்தின் போது  பெண்ணின் காதில் ஓத படுபவை.....இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.

இப்படி வலுகட்டாயமாக பதிய வைக்கப்படுபவை, புது பெண்ணின் மனதில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணருவதே இல்லை.
கணவன் நல்லவனாக இருந்தாலும் இந்த எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து விடுவதால், கணவனை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பெண் அணுக தொடங்குகிறாள். திருமண முடிந்த ஆரம்பத்தில் இது அவ்வளவாக வெளியே வருவதில்லை, போக போக கணவனை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளணும் என்கிற எண்ணம் தலை எடுக்க தொடங்கும்.

இன்றைய பெண்களுக்கு ஆணை விட நாம் எதில் குறைந்தவர்கள் என்ற எண்ணம் அதிகம். ஆனால் இதை குடும்பத்தில் நிலைநாட்ட துடிப்பது சரியன்று. தவிரவும் ஆணுக்கு சமம் என்றால் சம மரியாதை கொடுக்க வேண்டுமே,அதுவும் இல்லை, தனக்கு(ள்) அடங்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்...?!

அது என்ன ஆம்பளைங்க என்றாலே ஏதோ வேற்றுக்கிரக ஜந்து மாதிரி பார்க்கிறது...?!!! திருமணம் முடிந்த நாளில் இருந்து  கணவனை எப்படி எல்லாம் தன் வழிக்கு கொண்டு வரலாம் என்று பிளான் போடுவார்கள் சிலர் !! என்னவோ அதுவரை கணவன் ஒன்றும் தெரியாத முட்டாளாக இருந்தது போலவும், இவங்க புத்தி சொல்லி திருத்துற மாதிரியும்,  இப்படி பண்ணு, அப்படி பண்ணு என்று அட்வைஸ் பண்றதா பார்த்தா......!? பாவம் அப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்த ஆண். எல்லாவற்றிலும் பெண்ணின் பேச்சை கேட்கணும் என்றால் அந்த கணவனின் தனித்தன்மை என்ன ஆகும்? 

ஒரு சில ஆண்கள் மனைவியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாதவனாக, அடக்கி ஆளும் மனம் படைத்தவனாக இருக்கலாம், அதற்காக ஒட்டு மொத்த ஆண்களையும் அதே கண்ணோட்டத்தில் அணுகுவது அநியாயம். (ஒரு வேளை கணவன் அடக்கி ஆளும் மனம் கொண்டவனாக இருந்தாலும், மனைவியால் சந்தோசமாக குடும்பம் நடத்த இயலும் அது எவ்வாறு என்று பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.....!)

என்ன குறை கண்டாய் பெண்ணே ?

ஆண், பெண் யாராக இருந்தாலும் 100 சதவீதம் நிறைகள் உள்ளவர் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது கணவனிடம் மட்டும் நூறு சதவீத நிறைகள் இருக்கணும் என்று எதிர்பார்காதிங்க...! ஒரு பெண்ணிடம் உங்க கணவன் எப்படி என்று கேட்டு பாருங்க, "அய்யோ அவரா, அதையேன் கேட்குறீங்க..... வேலை  விட்டு வந்தாலும்  வீட்ல இருக்கறதே இல்ல, எப்பவும் நண்பர்கள் கூட வெட்டி பேச்சு தான், வீட்ல ஒரு துரும்பை கூட அசைக்கிறது இல்லை...எல்லாம் நான்தான் பார்க்க வேண்டி இருக்கு, இந்த மனுசனை கட்டிட்டு என்ன சுகத்தை கண்டேன்......" இப்படி.....கேட்டவங்க  காது தீப்பிடிக்கிற அளவு போயிட்டே இருக்கு.....இதுவா நல்ல தாம்பத்தியம் ? இல்லவே இல்லை...!

பொதுவா குறைகளை பட்டியல் போடுவதை மனைவிகள் நிறுத்தவேண்டும்.....பதிலுக்கு கணவனும் மனைவியின் குறைகளை பட்டியல் போட தொடங்கிவிட்டால் இதற்கே பொழுது சரியாக இருக்கும், குடும்பம் நடத்த முடியாது. வீட்டில் குறை சொல்வது போதாது என்று உறவினர்கள் ,அக்கம்பக்கமும் சொல்லிவிடுவதால் சின்ன விஷயம் , பெரிய பிரச்னை அளவிற்கு போய்விடும். அடுத்தவர்களுக்கு நம் வீட்டு பிரச்னை ஒரு பொழுது போக்கு வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போய்விடுவார்கள், ஆனால் அதை பெரிதாக எண்ணிக்கொண்டு சில பெண்கள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

ஒரு கணவனிடம் குறை என்றால் உதாரணதிற்கு குடிப்பழக்கம்.....

திருமணதிற்கு முன் ஒரு ஆண் குடிக்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பாகிறார்/காரணம். ஆனால் திருமணதிற்கு பின் கணவர் குடிக்க தொடங்குகிறார் அல்லது அதிகமாக குடிக்கிறார் என்றால் அதற்கு முழு பொறுப்பு அவரது மனைவி என்பேன்....அது எப்படி அவருக்கு தொழில்/வேலை  நெருக்கடி இருக்கலாம், மன அழுத்தம் காரணமா குடிக்கலாம் அல்லது புதிய நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் இது போன்ற எந்த காரணமாக இருந்தாலும் மனைவியின் அன்பும், அரவணைப்பும், முக்கியமாக புரிதலும் சரியான அளவில் கணவருக்கு கொடுக்கப்பட்டு வந்தால் அங்கே எந்த கெட்டப்பழக்கமும் ஏற்பட வழியே இல்லை. பழக்கம் ஏற்பட்டாலும் அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும். 'என் கணவன் சரியில்லை' என்று குறை சொல்லி புலம்பும் பெண்களுக்கு எனது ஒரே பதில் "தவறுகளின் ஆரம்பம் நீங்கதான்"

சண்டை போடும்போது ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவர்களை குறைத்து எடை போட்டுவிடாதீர்கள்...!சகித்துக்கொண்டு  இருக்கிறாங்க அவ்வளவு தான். ஆனால் இந்த சகிப்புத்தன்மையும் ஒரு அளவிற்கு தான்.  அளவை தாண்டும் போது கரையை உடைத்துக்கொண்டு போகும் வெள்ளத்தை போல கடந்து சென்றே விடும்.....அப்புறம் தலை கீழாக  நின்றாலும் உங்க பக்கம் திருப்ப முடியாது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கணவனிடம் இருக்கும் குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு இருக்கும் அவரிடம் நிறைகளை கவனத்தில் வையுங்கள். கூடுமானவரை இருக்கும் குறைகளை, நிறைகளாக மாற்ற முயலுங்கள்.....( 'இந்த மனுஷனிடம் நிறையா ? அப்படியெல்லாம் ஒண்ணுகூட இல்ல...!') நல்லா யோசிங்க.....! ஒண்ணு, இரண்டு எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்.....!! நிறைகளை அடிக்கடி சொல்லி உற்சாகப் படுத்துங்கள்.....! 

முக்கியமாக சின்ன சின்ன பாராட்டுகள் ! இதற்காக மேடை போடணும், மைக் வைக்கணும்னு அவசியம் இல்ல...அன்றாட வாழ்வில் கேசுவலாக சொல்லலாம்.....சொல்லித்தான் பாருங்களேன் ........!! 

ஒரு சில டிப்ஸ்.....

கணவரிடம்,

* எந்த பிரச்னைக்கும் டக்குனு தீர்வு சொல்றீங்க, எப்படிப்பா இப்படி...சூப்பர் !

* உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ்,சான்சே இல்ல போங்க அபாரம் !

* நடை கம்பீரமா இருக்குங்க ! நெற்றியில் விழும் முன் முடி செம அசத்தல்பா !

* பேசுறப்ப நடுநடுவே சிரிக்கும் இந்த சிரிப்பு என்னை ரொம்ப ஈர்க்குதுங்க ! நீங்க இல்லாதபோதும் அந்த சிரிப்பு என் காதில் கேட்டுட்டே இருக்குங்க !! (ஒருவேளை லவ் பண்ணி இருந்தால் அப்போ இதை விட ஓவரா சொல்லி இருப்பீங்களே !! இப்பவும் சொல்லுங்க, தப்பு இல்ல...!)

இதே ரீதியில் சொல்லி பாருங்க.....(அப்புறம் ரிசல்ட் என்னனு என்கிட்டே சொல்ல வேண்டாம், ரிசல்ட் எப்படி  இருக்கும் என்று எனக்கு நல்லா தெரியும் !! ) 

இது தாங்க வாழ்க்கை...இப்படி சிம்பிளா, ஜாலியா வாழ்ந்து வாழ்க்கையை முடிக்கிறதை விட்டுட்டு,   எப்பவும் கணவரை குறை சொல்லி அழுது புலம்பி நீங்களும் மன அழுத்தத்தில விழுந்து , அவரையும் வேற ஒண்ணுல விழ வச்சிட்டு, குழந்தைகளை பற்றியும் சுத்தமா மறந்துவிட்டு என்ன வாழ்க்கை வாழ்றீங்க.....!!? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ...!!

வாழ்க்கை வாழ்வதற்கே ....